செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் - நூல் விமரிசனம்

தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் - முனைவர் மு.வளர்மதி; பக்.424; ரூ.185; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2வது முதன்மைச் சாலை, தரமணி, சென்னை-113.

ஒரு மொழி இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் அந்த மொழியில் படைக்கப்படும் புதிய ஆக்கங்கள், பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுந்த நூல்கள், பிற இலக்கியங்களிலிருந்து பெறும் மொழிபெயர்ப்புகள் ஆகிய மூன்று வழிமுறைகள் அடிப்படைத் தளங்களாக அமைந்தன என்ற முன்னுரையுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தை விளக்கியுள்ளார் நூலாசிரியர். அந்த வகையில், தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் புதுமைப்பித்தன், அ.கி.ஜெயராமன், மாஜினி ரா.ரங்கசாமி, க.ரா.ஜமதக்னி, வெ.சாமிநாதசர்மா போன்றோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. "மொழிபெயர்ப்பு வேகம் மிகுதியாக இருக்கும் காலக்கட்டத்தில் இலக்கிய வேகம் மிகுதியாக இருப்பதைக் கடந்த கால வரலாறு காட்டும். மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு தொடர் பணி. ஒரு மொழியின் இலக்கியவாதிகள் மொழிபெயர்க்கப்படும்போது அந்த நூல்கள் வழியாக மற்றொரு மொழி இலக்கியவாதிகளுடன் ஒட்டுறவு ஏற்படுகிறது என்ற பதிவு உண்மை. அத்தகைய மொழிபெயர்ப்புக் கலையில் கைதேர்ந்த 17 அறிஞர் பெருமக்களைப் பற்றிய அற்புதமான பதிவு. இடையிடையே.. அவர்கள் கூறியுள்ள மொழிபெயர்ப்பு குறித்த கருத்துகளையும் எடுத்தாண்டுள்ளது சிறப்பு.

நன்றி‍: தினமணி (22.08.2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக