திங்கள், 14 செப்டம்பர், 2009

பறை- தமிழர் கலைவரலாற்றின் முகம்

தமிழிலக்கியத்தில்
'பறை' என்ற சொல்லைக் கடந்து போகிறபோது 'பறை' இசையின் ஈடுபாட்டுக்குப் பிறகு, நான் மெல்ல அதிர்வதுண்டு. இப்பொழுது வளர்மதியின் 'பறை' நூலைப் படித்தபிறகு அதிர்வுகளின் நீளம் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.
முனைவர் வளர்மதியின் 'பறை' பற்றிய இந்த ஆய்வு நூல், த‌மிழிசை பற்றிய ஆய்வு வரிசையில் ஒரு சிறப்பிடம் பெறும் என்று நம்புகிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் கலைவரலாறு பற்றிய புரிதலில், ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்றும் கருதுகிறேன். தமிழர்களின் திணைசார்ந்த பண்பாட்டு வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் பெற்ற பறை, காலப் போக்கில் எப்படி இழிந்து போனது என்பதைப் புரிந்து கொள்ள இந்நூல் பேரள்வுக்கு உதவும்......கவிஞர். இன்குலாப்

1 கருத்து: